Monday, May 30, 2022

 


காலுறை

 

தம்பி தம்பி எந்திரிடா இன்னும் தூங்கினா எப்படி என்று பார்வதி தன்னுடைய செல்லப் பிள்ளையை எழுப்பினார். படுக்கையில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த விசு புரண்டு புரண்டு படுத்தான். அடே சோம்பேறி எந்திரிடா, எதிர்த்த வீட்டு கிட்டு பள்ளிக்கூடம் போய்விட்டான். அவனைப் போல் நீயும் நல்லா படிக்கனும்டா எந்திரிடா என்று வழக்கம்போல் கதை பேச ஆரம்பித்தார் பார்வதி.


வருட முழுவதும் இதைக்கேட்டுப் பழகிய கிட்டு அரைத் தூக்கத்தில இல்லம்மா நான் போகமாட்டேன் என்று தன்னுடைய மழலைமொழியில்  கூறினான். மாமாவுக்குக் கோபம் வந்தது. நீயும் உன் பாட்டிபோல் படிப்பறிவு இல்லாமல் இருக்கனும்னு நினைச்சயா என்று பாட்டியைக் குறைசொல்லிக்கொண்டே அவனைத் தோளில் தூக்கிக்கொண்டு குளிக்க வைப்பதற்குச் சென்றார்.


தூக்கத்திலிருந்து விழிக்காத நான்கு வயது பாலகன் தூக்கத்திலே குளித்தான். அவசர அவசரமாகப் பார்வதி அன்று தயாரித்த சூடான உணவைத் தூக்கத்திலேயே ஊட்டிவிட்டார். ருசி அறியாத வயது, பாவம் கிட்டு என்ன செய்வான். மெல்ல மெல்ல ஓரிரு வாய்கள் விழுங்கினான். மீண்டும் உட்கார்ந்துகொண்டே தூங்க ஆரம்பித்தான். 

 

எரிச்சலடைந்த பார்வதி உன்னோட ரெம்ப ரோதனையா இருக்கு. நாளையில இருந்து உன் அப்பாதான் உன்ன கொண்டுபோய் விடனும். இன்னைக்கு வரட்டும் சொல்லிடுறேன் என்றார்.  பார்வதி எண்ணத்தில் ஆயிரம் சிறகுகள், தன்னுடைய பிள்ளை மிகப்பெரிய கல்விமானாக வந்து நிறைய சம்பளம் வாங்கித் தனி வீட்டில் அவனோடு வாழவேண்டும் என்பதே அவருடைய நீண்ட நாள் ஆசை. இது தவறில்லை. அவரும் ஒரு சராசரிப் பெண்தானே!

 

பார்வதி குழந்தைப் பருவத்தில் கம்போங் குடியிருப்பில் வசித்து வந்தார். சுகாதார மற்ற நிலையில் கூட்டத்தோடு கூட்டமாக வாழ்ந்த அவருக்கு சற்றுத்தொலைவில் உயர்ந்த நிலையில் வாழும் மக்களைப் பார்க்கும்போது நம்மால் வசதியாக வாழமுடியவில்லையே. நினைத்ததை வாங்கமுடியவில்லையே,  நம்முடைய பெற்றோர் கூலி வேலை பார்க்கிறாங்க என்று சொல்வதற்கே  வெட்கமாக இருக்கிறது. இவற்றை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்று பல நாள்கள் அவர் ஏங்கியதுண்டு. ஆனால் அவள் யாரிடம் தம் ஏக்கத்தை வெளிப்படையாகப் பேசுவது. பெற்றோர்கள் விடிந்துபோனால் அடைந்துதானே வீட்டுக்கு வருவார்கள். அதற்குள் அன்பு நிறைந்த பாட்டியின் மடியில் அசந்து பார்வதி தூங்கிவிடுவார். இதுதானே நாள்தோறும் நடக்கும். பள்ளிக்கூடம் செல்ல முடியாத குடும்பச் சூழ்நிலை. பாவம் பார்வதி என்ன செய்வாள். தனக்குப் பிறகு பிறந்த குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் அவள்தானே பார்த்து வந்தாள். 


இன்று பார்வதி அடுக்குமாடியில் குடியிருக்கிறாள். அவளுடைய கணவனோ ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகிறார். குறைந்த வருமானம். மூன்றரை வீடு. முன்னேறத்தான துடிக்கும் மனசு. இளமையில் கண்ட கனவை இப்போது யாரிடம் சொல்வது.

மகனை எப்படியாவது அதிகச் சம்பளம் பெறும் வேலைக்குப் படிக்க வைக்க வைக்க வேண்டும் என்பதே பார்வதியின் இன்றையக் கனவு. அது வேகம் எடுத்தது.

விசுவைத் தூக்கிக்கொண்டு காலுறையை அவசர அவசரமாக மாட்டினார். அவன்  காலை உதறினான். நேரம் ஆகிவிட்டது பள்ளிக்குப் போவோம் என்று கூறிக்கொண்டே அருகில் இருந்த பாலர்பள்ளிக்குத் தூக்கிக்கொண்டு வேகமாகச் சென்றார் பார்வதி.


பள்ளியில் விட்டுவிட்டுப் பார்வதி, அடுத்த வேளை உணவைச் சமைப்பதற்குத் தேவையான காய்கறிகளை வாங்குவதற்குச் சற்று விலை குறைந்த கடையைத் தேடிச் சென்றார்.


பாலர் பள்ளியில் சிறிது நேரத்தில் குழந்தை மயக்கம் அடைந்தது.  ஆசிரியர்கள் கூடினர். முதலுதவி செய்தனர். முதலில் காலில் மாட்டியிருந்த சூவைக் கழட்டினர். காலுறையைக் கழட்டினர். அப்போது  அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் காலுக்கடியில் சிறிய தேள் ஒன்று இறந்துகிடந்தது.


பதறிப்போன ஆசிரியர்கள் விசுவை உடனே மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். மருத்துவர்கள்  வேண்டிய சிகிச்சை செய்தனர். நல்ல வேளை விசு மெல்ல மெல்ல கண் விழித்தான். அவனுடைய அம்மாவைப் பார்த்ததும் மீண்டும் அழத்தொடங்கினான்.

 

 எழுதியர் சி. குருசாமி

No comments:

Post a Comment