குயில்
நிறத்தில் கரியது குயில்
நீள்குரலில் இனியது குயில்
காலையில் கரைந்திடும் குயில்
கற்பனையில் மிதந்திடும் குயில்!
குரலை வைத்து அறிவோம்
கூவிடும் கருத்தைப் புரிவோம்
மழலையில் சொல்லிடும் கருத்தை
மகிழ்ந்து செப்பிடும் கதையை.
கேட்கத் துடிக்கும் மனமும்
கேட்டபின் நிலைக்கும் மனத்தில்
மனத்தில் புதைந்த கருத்தை
மந்திரப் புன்னகையில் சொல்லிடுமே!
- சிகு
No comments:
Post a Comment