திருக்குறள் வாசிப்பு
இன்பம் - உரை ஆசிரியருக்கும் வெளியீட்டாளருக்கும் நன்றி உரித்தாகுக.
1291 |
அவர்நெஞ்சு
அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே |
|
நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு
அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து
உருகுவது ஏன்?.
|
1292 |
உறாஅ தவர்க்கண்ட
கண்ணும் அவரைச் |
|
நெஞ்சே!
நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம்
செல்கின்றாயே |
1293 |
கெட்டார்க்கு
நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ |
|
நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது,
துன்பத்தால் அழிந்தோர்க்கு
நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?.
|
1294 |
இனிஅன்ன
நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே |
|
நெஞ்சே!
முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப்
போகிறார்கள்? நான் பேசுவதாக
இல்லை. |
1295 |
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு
அஞ்சும் |
|
என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர்
கதையாகவே இருக்கிறது காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும். |
1296 |
தனியே
இருந்து நினைத்தக்கால் என்னைத் |
|
காதலர்
பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக
இருந்தது. |
1297 |
நாணும்
மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் |
|
அவரை
மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக்
கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன். |
1298 |
எள்ளின்
இளிவாம்என்று எண்ணி அவர்திறம் |
|
பிரிந்து
சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல்
நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும். |
1299 |
துன்பத்திற்கு
யாரே துணையாவார் தாமுடைய |
|
துன்பம்
வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார்
துணையாக இருப்பார்?. |
1300 |
தஞ்சம்
தமரல்லர் ஏதிலார் தாமுடைய |
|
நமக்குரிய
நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர்
உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும். |
No comments:
Post a Comment