Monday, May 30, 2022

 


எதற்கு விடுமுறை

 

கமலி கமலி உன்னை எத்தனதடவ சொல்லிட்டேன். காலையில இருந்து இன்னும் சாப்பிடாம டீவியிலே இருக்க. உனக்கு டீவி சோறுபோடுமா. ஏம்மா இது நல்லா இருக்கா. இதுக்குத்தானா லீவு விட்டாங்க என்று கமலியின் அம்மா உரக்கக் கத்தினார்.  

வீட்டில் நடக்கும் விசயத்தை ஓர் ஓரத்தில் நாற்காலியில் உட்கார்ந்து கவனித்துக்கொண்டு இருந்தார்.  அப்பாவின் அம்மா முத்துப்பேச்சி. அவரைப் பாட்டி பாட்டி என்று எல்லோரும் அன்புடன் அழைப்பார்கள்.   

கமலி, ஏம்மா அம்மா சொன்னா கேட்கவேண்டாமா, டீவி படம் கண்ணைப் பாழாக்கிடும், கண்ணாடி பவரக் கூட்டிடும். அம்மா சொன்னா கேளும்மா என்று பாட்டி அன்பு கலந்த குரலில் தட்டிக்கேட்டார்.  

இல்ல பாட்டி, இப்பத்தான் கொஞ்ச நாட்கள் கிடைச்சிருக்கு. பொழுதைச் சந்தோசமாக் கழிக்க டீவிகூடப் பாக்கவிடலன்னா என்ன பாட்டி, நீங்க சொல்லுங்க என்றாள் கமலி. கமலியின் ஆதாங்கம் பாட்டிக்குப் புரியும். என்ன செய்ய பிள்ளைகள் கெட்டிடும் என்பதும் பாட்டிக்குத் தெரியும். ஒருமாதங் கழித்துப் புத்தகத்தைத் திறந்தா ஒரே சலிப்பாயிடும் என்பதை நன்கு புரிந்து வைத்திருந்த பாட்டி, சற்றுநேரம் அமைதியாக இருந்தார்.    

பாட்டியைப் பார்த்துக்கொண்டிருந்த கமலி, என்ன பாட்டி நான் சொல்ரது சரிதானஎன்றாள். பாட்டி, ‘கமலி, பொழுதுபோக்க எவ்வளவோ இருக்கு. அம்மாவுக்கு ஒத்தாசையா கொஞ்சநேரம் சமையல்ல இருந்தா, வருசம்பூரம் சமைக்கிற அம்மாவுக்குக் கொஞ்சம் சந்தோசந்தான. நீயும் பின்னால, ஓம் பிள்ளைகளுக்குச் சமையலைக் கத்துக்கொடுக்கனுமில்ல. இல்லாட்ட நம்ம பாரம்பரியச் சமையல் கொஞ்சங்கங் கொஞ்சமாக மறைஞ்சிறுமில்ல. அதனாலதாம்மா நான் சொல்லுரங் கமலி என்று சொல்லிமுடித்தார் பாட்டி. பிரியமான பாட்டி சொன்ன கதையைக் கேட்ட கமலி சிந்திக்க ஆரம்பித்தாள்.     

எழுதியவர் சி. குருசாமி                160  

No comments:

Post a Comment