அன்பே அகிலம்
அன்புடையார் என்றென்றும் வாழ்வர்
அன்பற்றோர் அன்பை அறிவது
அன்போடு வாழ வழிவகுக்குமே
அகிலம் நிலைக்க வழிகோலுமே!
அன்பை அறிவோடு இணைத்து
அன்பைப் புரிதல் வேண்டும்
அகத்திலன்பு சிறக்க வேண்டும்
ஆழ்கடல் நீந்த வேண்டுமே!
ஆழ்சிந்தனை பெறமுயல வேண்டும்
அகிலம் என்றும் நிலைப்பதற்கே!
அகமகிழ்ந்து அனைவரும் வாழ்வதற்றே
அகன்ற சிந்தையைப் பெற்றிடுவோமே!
_ சி.குரு
No comments:
Post a Comment