விழுமியங்களும் நாமும்
சிறப்புப் பெற்ற விழுமியங்களை நாம் பின்பற்றாவிட்டால் பல
பாதிப்புகள் ஏற்படும். தனிமனிதனுடைய வாழ்விலும் சமூகத்தின் அமைப்பிலும் பல
சீர்கேடுகள் ஏற்படும். காலப்போக்கில் சமூகத்தில் குழப்பம் ஏற்படுவதோடு அமைதி
இன்மையும் ஏற்படும். எனவேதான், காலங்காலமாக உலகமுழுவதும் சிறந்த விழுமிங்களை மக்கள்
கடைப்பிடித்து வந்தனர்.
குழந்தைப் பருவத்திலிருந்து நல்ல வாழ்வியல் சிந்தனைகளை
வளர்த்துக்கொள்வதற்கு நாம் எப்பொழுதும் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
இவற்றைப் பற்றிய கருத்துகள் மூதுரையிலும்,
திருக்குறள்களிலும் நீதி நூல்களிலும் ஏராளம் இருக்கின்றன. அவற்றை நாம் பின்பற்றி
நம்முடைய எதிர்காலத்தைச் சிறப்புடன் அமைத்துக்கொள்வோம்.
----- சிகுரு
No comments:
Post a Comment