பொருத்தமான விடையைக் கண்டுபிடித்து எழுதவும்.
ஒருநாள் ஒரு செடியில் பூத்த மலர் மறுநாள் வாடிப்போய்விடும். அதற்காக அந்தச் செடி வருந்துவது கிடையாது. ஏனென்றால் மறுநாள் புதிய மலர் பூக்கத்தொடங்கிவிடும். பூத்த மலர்களைக் கண்ட நம் உள்ளம் பூரிப்படைகிறது. அந்தச் செடியும் மிகவும் அழகாகத் தோற்றமளிக்கத் தொடங்கிவிடும். மேலும், அது அடுத்த கட்டத்தை நோக்கி வளர்ச்சி பெறத்தொடங்கிவிடுகிறது. ம ம அதுபோலதான் மனிதனுடைய வாழ்க்கையும் நாள்தோறும் பல மாற்றங்களை அடைந்துகொண்டே செல்கிறது.
இந்த
மாற்றங்கள் நம்மை அடுத்த கட்ட நகர்வுக்கு அழைத்துச் செல்கிறது.
நாள்தோறும் புதுப்புது சிந்தனை ஏற்படுகிறது. இந்தச் சிந்தனையின் மூலம் நாம் தொடர் வளர்ச்சி பெறுகிறோம்.
இந்த வளர்ச்சி குடும்ப வளர்ச்சியாகத் தோன்றிச் சமூக
வளர்ச்சியாக மாறுகிறது. இன்னும்
சொல்லப்போனால் ஒரு நாட்டின் வளர்ச்சியாக மலர்கிறது. பல நாடுகளின் வளர்ச்சி
உலக வளர்ச்சிக்கு வித்திடுகிறது.
வினாக்கள்.
அடைப்புக் குறிக்குள் சரியான விடையின் எண்ணைத்
தேர்ந்தெடுத்து எழுதவும்
எப்போது நம் மனம் மகிழ்ச்சி அடைகிறது?
1 பூத்த மலர் வாடிவிடும்போது
2 புதிய மலர்களைக் கண்டபோது
3 செடி வருந்தாமல் இருக்கும்போது
4 செடி அழகாகத் தோன்றும்போது ( )
2 மனிதனுடைய வாழ்க்கை என்ன செய்து கொண்டிருக்கிறது?
1 அடுத்த கட்டத்தை நோக்கி வளர்கிறது
2 அழகாகத் தோற்றமளிக்கிறது
3 நாள்தோறும் பல மாற்றங்களைப் பெறுகிறது
4 எப்போதும் வருந்தாமல் இருக்கிறது ( )
3 எப்போது நாம் தொடர்வளர்ச்சியைப் பெறுகிறோம்?
1 புதுப் புது சிந்தனை ஏற்படும்போது
2 குடும்பம் வளர்ச்சி அடையும்போது
3 சமூகம் வளர்ச்சி அடையும்போது
4 உலகம் வளர்ச்சிக்கு வித்திடும்போது ( )
சுயவிடைக் கருத்தறிதல்.
1 மனிதனுடைய வாழ்க்கையை எதனோடு ஒப்பிடுகிறோம்? ஏன்?
_________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
2 இந்த உலகத்தின் வளர்ச்சிக்கு எவை எல்லாம் காரணங்களாக விளங்குகின்றன?
______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
No comments:
Post a Comment