புறாக்கூடு
புறாவைப் பார்த்து மகிழ்ந்திடுவேம்
புறா கூட்டையும் பார்த்து மலைப்போம்
புறாவந்து அடைந்திடும் மாலையிலே
புறா சென்று பறந்திடும் காலையிலே!!
முட்டை சில போட்டிடுமே
மூடி அதுஅடை காத்திடுமே
எட்டி நின்றும் பார்த்திடுமே
இனிய குஞ்சும் வந்திடுமே!!
பறக்கக் கற்றுக் கொடுத்திடுமே
பறந்து பறந்து விழுந்திடுமே
பறந்து நன்கு சென்றிடுமே
தாயை மறந்து வாழ்ந்திடுமே
குஞ்சுதனைக் கூட்டில் காத்திடுமே
கொஞ்சி அகம் மகிழ்ந்திடுமே
கொஞ்சகாலம் பறந்து போனதுமே
கொஞ்சும் நிலையும் மறந்திடுமே
வாழும் காலம் முடியும் நிலையில்
வாழ்வைக் கொடுப்பார் யாருமில்லை
கொத்திக் கொத்தி நின்றிடுமே
கொத்த மறந்து போயிடுமே!!
புறா வாழ்க்கை போன்றதே
பூரிப்பு நிறைந்த மனித வாழ்க்கை
எண்ணிப் பார்த்திட வேண்டுமே
எண்ணிக் கற்றிட வேண்டுமே!!
ஏக்கம் நமக்கு நீங்கிடுமே
ஏற்றம் வந்து சேர்ந்திடுமே!!
என்றும் மகிழ்ந்து இருந்திடுவோமே
எல்லோரையும் மதித்து வாழ்ந்திடுவோமே!!
----------சி.குரு
No comments:
Post a Comment