கொடுக்காமலும் எடுக்காமலும்
உல்லாசம் பொங்கிடும் போதுநம்
உள்ளமெல்லாம் நிறைந்து மகிழ்ந்திடுமே!
உண்மையில் நின்று உயர்ந்திடும்போது
உருவமெல்லாம் சிலிர்த்து நிற்குமே!
உண்மையை நாம் உணர்ந்திடும்போது
கள்ளமில்லா கவிதைபாடி நின்றிடுமே
மெல்ல மெல்ல மகிழ்ந்திடுவோம்
மேன்மை பெறும் செயல்களாலே!
கொடுக்காமல் நாம் இருந்திட்டாலும்
எடுக்காமல் இருந்திடல் வேண்டும்
எடுக்காமல் இருந்திடும்போது நம்மனம்
படுக்காமல் நிமிர்ந்து நிற்குமே!
- சிகு
No comments:
Post a Comment