வாழ்க்கை
வண்ணமயமாக நாம் வாழ்ந்திட
வாழும் முறை அறிந்திட வேண்டும்
வற்றாத பிரச்சினை வந்திடினும்
வளமாக மாற்றிட வழிகள் பலவுண்டு
வழிதெரியா மனிதன்கூட வழியறிவான்
வழியறியும் சிந்தனைப் பெருக்கத்தாலே
வாழ்கைதனில் உயர்ந்து நிற்பான்
வாழும்முறை அவன் அறிந்திடும்போதே.
செல்லும்வழியில் சிக்கல் பலவாயினும்
சிறப்பினை உணர்ந்து சென்றிட வேண்டும்
சிறப்பினை உணர்ந்து சென்றிடும்போது
சிக்கல்தானே சுழியமாகிச் சிதறிப்போகுமே!
----------------------------சி.கு
No comments:
Post a Comment