Tuesday, February 3, 2026

 

சொல்லும் கதையைச் சொல்லியே தீரனும்!


சொல்லாமல் சொல்லுவோம் எதனையும்

சொல்லும்போது ஏற்படும் மனவருத்தம்

சொல்லாமல் சொல்லும்போது மறைந்திடுமே

சொன்னதை சொன்னாலும் வருத்தமே

சொல்லாமல் இருந்தாலும் பெருவருத்தமே!


யார்சொன்னாலும் கேட்காத பிள்ளைகளும்

கேட்டுத்தான் ஆவாரே சொல்பவர் சொன்னால்

அன்புடன்  சொன்னால் அமைதியாக இருப்பர்

அதட்டிச்  சொன்னால் மறுத்திடுவார்!


அம்மா சொன்னாலும் சிலநேரம் எதிர்த்திடுவர்

அறிவுரை சொன்னாலே வெறுத்திடுவார் 

சொல்லுவார் சொன்னால் சுவரும் மறைத்திடாது

சொல்லும் கதையைச் சொல்லியே தீரனும்!.