Saturday, June 11, 2011




படமும் நாமும்













1. படத்திலிருந்து நீ அறிந்துகொண்ட செய்தியை எழுதுக

2. படத்திலிருக்கும் பச்சை நிறம் நமக்குக் கற்றுக்கொடுப்பது என்ன?

3. படத்திலிருக்கும் பொருளின் பயன்கள் இரண்டு கூறுக.
வாக்கியங்களில் எழுதவும்

1. முன்னோக்கி
_________________________________________________________________
_________________________________________________________________

2. வாழ்த்துரை
_________________________________________________________________
_________________________________________________________________

3. வளமாக
________________________________________________________________
________________________________________________________________

4. உயர்ந்தோரை
________________________________________________________________
________________________________________________________________

5. வாழ்வாங்கு
________________________________________________________________
________________________________________________________________

Monday, March 28, 2011

வாக்கியங்களில் அமைக்கவும் நிலவு ______________________________________________ பார்த்த ______________________________________________ பார்த்த பொழுது _____________________________________________ வாழ்க்கைத் துணையை ______________________________________________ வரலாற்றில் ______________________________________________ வாக்கியத்தில் ________________________________________________ மிகநீண்ட ________________________________________________

Monday, March 21, 2011

வாக்கியங்களில் எழுதவும்

திட்டமிடுதல்
_________________________________________________________

வெற்றி
_________________________________________________________

அடைவதற்குரிய
_________________________________________________________

குறிக்கோளை
_________________________________________________________

உருவாக்கினர்

_________________________________________________________

சவால் விட்டனர்
_________________________________________________________

உரியவர்
_________________________________________________________


வாக்கியங்களை முடித்து எழுதுக
ஜப்பானில் ஏற்பட்ட கடல் சீற்றம் உலகமக்களைச் சிந்திக்கத்தூண்டியது.

உலக மக்களின் சிந்தனை தூண்டக் காரணமாக இருந்தது _______________________.

உலகக் கோப்பையை வெல்வதற்கு பல நாடுகள் போட்டி போடுகின்றன.

பல நாடுகள் போட்டி போடுவதற்குக் காரணமாக இருப்பது __________________________.

பிறருக்கு முடிந்த வரை உதவி செய்கின்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் நாம் மற்றவர்களின் அன்பைப் பெறும் வாய்ப்பைப் பெறுவோம்.

நாம் மற்றவர்களின் அன்பைப் பெறும் வாய்ப்பைப் பெறுவதற்கு __________________________.


பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளாவிட்டால் _________________________________________________________________________.

Friday, March 18, 2011

பாரதியார்

புதுமைப் பெண்
புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாதவப் பெரியோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!
- பாரதியார்

Sunday, October 24, 2010

பயிற்சி 37
கவிதையின் கருத்தும் நயமும் இங்கே இடம்பெற்றுள்ளன. அவற்றைப் படித்த பின்னர் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை எழுதவும் – சிந்தனைச் சிற்பி கவிஞர் வாலி இந்தக் கவிதையை எழுதியுள்ளார். அவருக்கு நன்றி உரித்தாகுக.

கவிதை 3 - படி


பாடலின் கருத்து

பெண்ணே!. படித்த பெண்ணைத்தான் இவ்வுலகம் பாராட்டும். எனவே, நீ பாராட்டும்படி படிக்க வேண்டும்.

நீ நாள்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் படிக்க வேண்டும். நீ கல்வியைக் கற்றுக்கொடுக்கும் கல்விச் சாலையின் வாயிற் படியில் ஏறிச் சென்று படிக்க வேண்டும்.

பாரதியாரும் பாரதிதாசனும் மீண்டும் மீண்டும் படித்துச் சாதனைகள் செய்தபடி நீ படிக்க வேண்டும்.

நீ படித்தது நன்றாகப் புரியும்படி ஆழமாகவும், அகலமாகவும் படிக்க வேண்டும். இம்முறையில் படிக்கும்போது அனைத்துப்பாடங்களும் உனக்கு மிகவும் எளிமையாகிவிடும்.

நீ சிறந்த முறையில் படிக்கும்போது படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். அதனால், பெண்ணே! படிப்பு உனக்கு முக்கியம் ஆகும்.

நீ இருக்க வேண்டிய இடம் சமையல் கூடம் என்று யாராவது சொன்னால் நீ அவர்கள் மீது கோபப்படு. வாழ்க்கை என்னும் படகை முறைப்படி நன்றாகச் செலுத்துவதற்குக் கல்விதான் நீ கையில் ஏந்தவேண்டிய துடுப்பாக இருக்கிறது..

பெண்ணே! படித்து முடித்தபின்னர் நீ வேலைக்குப் போனால் நல்ல வருமானம் கிடைக்கும். அதனால் ஆண்பிள்ளை வீட்டாரைத் தேடிப்போகாமல் அவர்களாகவே வீடு தேடி உன்னைப் பெண்பார்க்க வருவார்கள்.

திருமணத்திற்குப் பின்பு உன் கணவனின் தாயாருக்கு ஓரளவு நீ கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். மேலும், நீ நம் முன்னோர்கள் கூறியுள்ள மரபுப்படி நடக்கவேண்டும்.

1
பெண்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை வாலி எவ்வாறு குறிப்பிடுகிறார்?
2
பெண்கள் ஏன் கல்வி கற்கவேண்டும் என்று வாலி கூறுகிறார்?
3
பெண் கல்வி கற்பதால் அடையும் நன்மைகள் யாவை?
4
கவிஞர் வாலி எப்படியெல்லாம் படிக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்?
5
மரபு வழி வந்த பெண்களைப் பற்றி கவிஞர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?
6
படித்த பெண்களின் சிறப்புகளைக் கவிஞர் வாலி எவ்வாறு குறிப்பிடுகிறார்?
7
`படி` என்னும் கவிதையில் அமைந்துள்ள சொல்லாட்சி சிறப்பினை விளக்கி எழுதுக.