Tuesday, August 15, 2023

 

ஒலிப்பதிவு செய்யவும்

ஒரு காட்டில் இரண்டு சிங்கங்கள் வசித்தன. அவை இரண்டும் நன்றாகப் பழகும் குணமுடையவை. எப்போதும் மற்ற விலங்குகளிடம் மிகவும் அன்புடன் நடந்துகொள்ளும். ஆனால், நாள்தோறும் பசிக்கும்போது தனக்குப் பிடித்த விலங்குகளை மட்டும் கொன்று தங்களுடைய பசியைப் போக்கிக்கொள்ளும்.


அதனால், மற்ற விலங்குகளுக்குச் சிங்கங்களைப் பிடிக்காது. அவை சிங்கத்தைப் பார்த்தாலே ஒழிந்துகொள்ளும். இந்தச் செயல் சிங்கங்களுக்கு வருத்தத்தைத் தந்தது. அவை பசி இல்லாமல் இருந்தால் மற்ற விலங்குகளைக் கொல்லும் நிலை ஏற்படாது. அந்த இனமும் அழியாது என்று நினைத்தது. அதனால், அவ்வப்போது அவை வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும்.  ஆனால், இயற்கை விலங்குகளைக் கொன்று தின்னும் பழக்கத்தை விலங்குகளுக்குக் கொடுத்ததன் ரகசியத்தை அவை புரிந்துகொள்ளவில்லை. அந்த ரகசியத்தைப் புரிந்துகொண்டால் அவை மகிழ்ச்சியுடன் வாழும்.  

சிகுரு

No comments:

Post a Comment