Sunday, September 26, 2010

பயிற்சி 31 / 2010

கீழ்கண்ட பகுதியை முப்பது சொற்களில் சுருக்கி எழுதுக.

ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் அவர்கள் முழு மனத்துடன் ஈடுபட்டு வெற்றி காண்பதை நாம் காணலாம். ஒருசிலருக்குக் கலைத்துறை மிகவும் பிடிக்கும். பொம்மை செய்வதும் ஒருவகையால் பார்த்தால் கலைத்துறையே.

ஒருசிலர் விலங்குகளையும் மனிதர்களையும் பொம்மைகளாகச் செய்து விற்கின்றனர். அவை அவர்களுக்கு வருமானத்தைத் தருகின்றன. அதைக்கொண்டு சிலர் குடும்பச்செலவை ஈடுகட்டுகின்றனர். அதனால், அவர்கள் அவற்றைத் தயாரிக்கும்போது மிகவும் கவனமாக இருக்கின்றனர். அவர்கள் தயாரிக்கும் பொம்மைகளில் ஓரிரு பொம்மைகள் மிகவும் அழகாகத் தோன்றும். மற்றும் சில பொம்மைகள் கற்பனை மிக்கவைகளாக இருக்கும். அவற்றைப் பார்த்து ரசிக்கும்போது மனத்தில் உள்ள கவலைகூடப் பறந்துபோகும்.

எனவே, பொம்மைக் கலையை அடிப்படையாகக்கொண்டு இன்று இயந்திர மனிதர்களை உருவாக்கி வருகிறார்கள். இவை தொடர்பாகப் பல நிலைகளில் ஆராய்ச்சி நடைபெற்றுவருகின்றன. அதோடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் திரைப்படங்களையும் தயாரிக்கின்றனர். மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுமகிழ்கிறார்கள்.
பயிற்சி 30 / 2010

கீழ்கண்ட பகுதியை முப்பது சொற்களில் சுருக்கி எழுதுக.



ஆதிகாலத்தில் மனிதன் மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தான், இருட்டத்தொடங்கியதும் குகைகளில் தங்கினான். அவன் அங்கு விலங்குகளுக்கு அஞ்சியே வாழ்ந்தான். அதனால், தன்னோடு போராடும் விலங்குகளைக் கொன்று குவித்தான். அக்காலகட்டத்தில் அவன் விலங்குகளின் மாமிசத்தையே முக்கிய உணவாக உண்டான். அவன் சிந்திக்கத்தொடங்கியதும் அப்பகுதிகளை விட்டுவெளியேறத் தொடங்கினான். அவன் மலைப்பகுதியில் பயன்படுத்திய நெருப்பு அவனுடைய வாழ்வில் ஒளி ஏற்றத்தொடங்கியது.

பின்னர், அறிவியல் துறை படிப்படியாக வளரத்தொடங்கியது. தற்காலத்தில் இத்துறையில் பல புதுமைகள் நடைபெறுகின்றன. இந்தப் புதுமைகள் வேகமாக நடந்து வருவதால் இக்காலத்தை அறிவியல் காலம் என்று கூறலாம்.

இன்று அறிவியலில் ஏராளமாகக் கண்டுபிடித்து வருகிறார்கள். இதனால், அதிகமான கழிவுகள் வெளி வருகின்றன. இவை இவ்வுலகை வெப்பம் அடையச் செய்கின்றன. இவ்வெப்பத்தால் பனிக்கட்டி உருகி வருகிறது. அதனால் பூமியின் நிலப்பரப்பு சுருங்குகிறது. இதன் காரணமாக ஒருசில சிறிய நாடுகள் எதிர்காலத்தில் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆபத்தைத் தடுக்க நாம் அனைவரும் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள உடனே முயற்சி செய்யவேண்டும்.
வாக்கியங்களை முடித்து எழுதும்போது கவனிக்கவேண்டியவை.

ஒருமை பன்மை (குருவி, குருவிகள, பழம், பழங்கள்
காலங்கள் (இறந்த காலம் – பழத்தைத் தின்றது, பழத்தைத் தின்கின்றது – நிகழ்காலம், எதிர்காலம் – பழங்களைத் தின்னும்.

வாக்கியங்களை முடித்து எழுதுக.
(முயன்று பார்த்துப் பகிர்ந்துகொள்ளவும்)




கொய்யா மரத்திலிருந்த குருவி இனிய சுவையுடைய பழத்தைக் கொத்தித் தின்றது.

கொய்யா மரத்திலிருந்த இனிய சுவையுடைய பழம் குருவியால் ___________________________________.


கொய்யா மரத்திலிருந்த குருவிகள் இனிய சுவையுடைய பழங்களைக் கொத்தித் தின்றன.
கொய்யா மரத்திலிருந்த இனிய சுவையுடைய பழங்கள் குருவிகளால் ___________________________________.

கொய்யா மரத்திலிருந்த குருவிகள் இனிய சுவையுடைய பழங்களைக் கொத்தித் தின்னும்.
கொய்யா மரத்திலிருந்த இனிய சுவையுடைய பழங்கள் குருவிகளால் ____________________________________.

கொய்யா மரத்திலிருந்த குருவி இனிய சுவையுடைய பழத்தைக் கொத்தித் தின்னும்.
கொய்யா மரத்திலிருந்த இனிய சுவையுடைய பழம் குருவியால் ____________________________________.

கொய்யா மரத்திலிருந்த குருவி இனிய சுவையுடைய பழங்களைக் கொத்தித் தின்னும்.
கொய்யா மரத்திலிருந்த இனிய சுவையுடைய பழங்கள் குருவியால் ____________________________________.

Thursday, September 23, 2010

கோடிட்ட இடத்தை நிரப்புக

ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த வேலையைத் தேர்ந்தெடுக்கின்றனர். அதில் அவர்கள் முழு மனத்துடன் ஈடுபட்டு வெற்றி காண்பதை நாம் _________________. ஒருசிலருக்குக் கலைத்துறை மிகவும் பிடிக்கும். பொம்மை ___________________ கலைத்துறையே.

ஒருசிலர் விலங்குகளையும் மனிதர்களையும் பொம்மைகளாகச் செய்து விற்கின்றனர். _______________________ அவர்களுக்கு வருமானத்தைத் தருகின்றன. அதைக்கொண்டு சிலர் குடும்பச்செலவை ஈடுகட்டுகின்றனர். ________________________ அவர்கள் அவற்றைத் தயாரிக்கும்போது மிகவும் கவனமாக இருக்கின்றனர். அவர்கள் தயாரிக்கும் பொம்மைகளில் ஓரிரு பொம்மைகள் ____________________ அழகாகத் தோன்றும். மற்றும் சில பொம்மைகள் கற்பனை மிக்கவைகளாக இருக்கும். அவற்றைப் பார்த்து ரசிக்கும்போது மனத்தில் உள்ள கவலைகூடப் பறந்துபோகும்.

எனவே, பொம்மைக் கலையை அடிப்படையாகக்கொண்டு இன்று இயந்திர மனிதர்களை உருவாக்கி வருகிறார்கள். இவை தொடர்பாகப் பல _________________________ நடைபெற்றுவருகின்றன. அதோடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் திரைப்படங்களையும் தயாரிக்கின்றனர். மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கண்டுமகிழ்கிறார்கள்.

உரையாடல்
அல்லியும் மல்லியும் சந்தித்தபோது கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்

அல்லி:
குமுதா, சீக்கிரம் வா, உனக்காக நான் எவ்வளவு நேரம் காத்திருப்பது?

மல்லி:
மன்னித்துவிடு அமுதா. வீட்டில் அப்பாவுக்குத் திடீரெனக் காய்ச்சல் ஏற்பட்டது. அம்மாவுக்குத் துணையாக இருந்து உதவி செய்து வந்தேன்.

அல்லி:
அப்படியா! அவருக்கு என்ன?

மல்லி:
நேற்றுப் பெய்த மழையில் முழுமையாக நனைந்துவிட்டார். நடு இரவில் தும்மல் ஏற்பட்டது. காலையில் எழுந்தவுடன் உடம்பெல்லாம் கொதிப்பாக இருந்தது. அம்மா அவரை மருந்தகத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அல்லி:
அடடா! நீ முதலிலேயே என்னிடம் தொலைபேசியில் சொல்லியிருக்கலாமே. வா உடனே நானும் வீட்டுக்கு வருகிறேன். உன் அப்பாவை நலம் விசாரிக்க வேண்டும்.

மல்லி:
மிகவும் நன்றி அமுதா. உன் அக்கறையான பேச்சைக் கேட்கும்போது மனம் ஆறுதலாக இருக்கிறது.

அல்லி:
அப்படியென்றால் ஒன்று செய். நான் நூலகம் சென்று நமக்குத் தேவையான புத்தகங்களை உன் வீட்டுக்குக் கொண்டுவருகிறேன். அங்கே அமர்ந்து ஆசிரியர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்போம். நீ முதலில் வீட்டுக்குச் செல். அப்பாவைக் கவனி.

மல்லி:
அப்படியா சொல்கிறாய். நான் உன்னை மட்டும் எப்படி இங்கே தனியாக.. ..

அல்லி:
அதெல்லாம் ஒன்றும் கவலைப்படாதே. ஒருவருக்கொருவர் இதுபோன்ற நேரத்தில் உதவி செய்யவில்லை என்றால் பின்னர் நட்புக்குத்தான் அர்த்தம் என்ன?

மல்லி:
நன்றி அமுதா .. நான் வீட்டிற்கு முதலில்போய் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் துணையாக இருக்கிறேன். நீ மெல்ல வந்தால் போதும்.


அமுதா:
சரி குமுதா. கவலைப்படாதே. என் பெற்றோருக்கும் தெரிவித்துவிட்டுப் பின்னர் சந்திக்கிறேன்.
கோடிட்ட இடங்களை நிரப்புக.

ஆதிகாலத்தில் மனிதன் மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்தான், இருட்டத்தொடங்கியதும் குகைகளில் தங்கினான். அவன் அங்கு விலங்குகளுக்கு ____________________ வாழ்ந்தான். அதனால், தன்னோடு போராடும் விலங்குகளைக் கொன்று குவித்தான். அக்காலகட்டத்தில் அவன் விலங்குகளின் மாமிசத்தையே ______________________ உணவாக உண்டான். அவன் சிந்திக்கத்தொடங்கியதும் அப்பகுதிகளை விட்டுவெளியேறத் தொடங்கினான். அவன் மலைப்பகுதியில் ____________________ நெருப்பு அவனுடைய வாழ்வில் ஒளி ஏற்றத்தொடங்கியது.

பின்னர், அறிவியல் துறை படிப்படியாக வளரத்தொடங்கியது. தற்காலத்தில் இத்துறையில் _____________________ புதுமைகள் நடைபெறுகின்றன. இந்தப் புதுமைகள் வேகமாக நடந்து வருவதால் இக்காலத்தை அறிவியல் காலம் என்று கூறலாம்.

இன்று அறிவியலில் ஏராளமாகக் கண்டுபிடித்து வருகிறார்கள். இதனால், அதிகமான கழிவுகள் வெளி வருகின்றன. ____________________ இவ்வுலகை வெப்பம் அடையச் செய்கின்றன. இவ்வெப்பத்தால் பனிக்கட்டி உருகி வருகிறது. ________________________, பூமியின் நிலப்பரப்பு சுருங்குகிறது. இதன் காரணமாக ஒருசில சிறிய நாடுகள் எதிர்காலத்தில் கடலுக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆபத்தைத் தடுக்க நாம் அனைவரும் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள உடனே முயற்சி செய்யவேண்டும்.
பயிற்சி 24 - உயர்நிலை 1 (மரபுத்தொடர்கள்)

மரபுத்தொடர்கள்
விளக்கம்

1
ஆசை வார்த்தை

ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்படுதல்
2
ஆறவமர
நிதானமாகச் செயல்படுதல்
3
ஏட்டிக்குப் போட்டி
எதிர்கருத்துகளைக் கூறுதல்
4
ஒரு கை பார்த்தல்
சவால் விடுதல்
5
ஒளிவு மறைவு
எண்ணத்தை மறைத்தல்
6
ஓட்டைக்கை
பெருஞ்செலவாளி - அதிகமாகச் செலவு செய்பவன்
7
ஓட்டைவாயன்
இரகசியத்தைக் காப்பாற்ற முடியாதவன்
8
கட்டுக் கதை
பொய்க் கதை சொல்லுதல்
9
கம்பி நீட்டுதல்
தப்பித்துச்செல்லுதல்
10
கண் மூடித்தனம்
சிந்திக்காமல் ஒரு செயலில் ஈடுபடுதல் - அறியாமையில் இருத்தல்
11
கரைத்துக் குடித்தல்
ஒன்றைப் பற்றி நன்கு அறிந்திருத்தல்
12
காலில் விழுதல்
மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுதல் -பெரியோர்களின் வாழ்த்துகளைப் பெறுவதில் ஈடுபடுதல்
13
குரங்குப் பிடி
பிடிவாதமாக இருத்தல்
14
கை கழுவுதல்
வெறுத்து ஒதுக்கி வைத்தல் - விட்டுவிடுதல்
15
கையுங்களவுமாக
தவறு செய்யும்போது பிடிபடுதல்
16
சிட்டாய்ப் பறத்தல்
மிகவும் வேகமாகச் சிட்டைப்போல் செல்லுதல்
17
செவி சாய்த்தல்
கூர்மையாகக் கேட்டல்
18
தட்டிக் கேட்டல்
தவறு செய்யும்போது கண்டித்தல்
19
தட்டிக் கொடுத்தல்
உற்சாகப்படுத்துதல் - தளர்வில்லாமல் இருக்கச் செய்தல்
20
தட்டிப் பறித்தல்
உரிமையைப் பறித்துக்கொள்ளுதல்






21
நட்டாற்றில் விடுதல்
நம்பிக்கைக்குத் தீங்கு செய்தல் - முழுமையான உதவி செய்யாமல் இருத்தல்
22
பகல் கனவு
கற்பனையில் மிதத்தல் – செயல் வெற்றி பெறாமல் இருத்தல்
23
பல்லைக் காட்டுதல்
காரியத்தைச் சாதிப்பதற்குச் சிரித்தல்
24
புத்தகப் புழு
புத்தகத்தை மட்டும் படித்துக்கொண்டிருத்தல் – உலகத்தைத் தெரியாமல் இருத்தல்
25
பூசி மெழுகுதல்
குறையை மறைத்தல்
26
வாய்க்கொழுப்பு
தேவையில்லாததைப் பேசுதல் -திமிராகப் பேசுதல்
27
வாலாட்டுதல்
சேட்டை செய்தல் –
குறும்புத் தனம் செய்தல்
28
வெளுத்து வாங்குதல்
நன்றாகச் செய்தல் – ஒரு செயலை மிகச் சிறப்பாகச் செய்து முடித்தல்





1 இணைமொழிகள்
உயர்நிலை

இணைமொழிகள்
விளக்கம்

1
அருமை பெருமை
உயர்வு - சிறப்புத் தன்மை
2
அக்கம் பக்கம்
அண்மையில் -அருகில் - பக்கத்தில்
3
அல்லும் பகலும்
இரவும் பகலும் - ஓய்வில்லாமல் உழைத்தல்
4
அன்றும் இன்றும்
கால முழுவதும் - தொடர்ச்சியாக - காலங்காலமாக
5
ஆடல் பாடல்
நடனமும் பாடலும் - ஆட்டம் பாட்டம்
6
ஆடை அணி
ஆடையும் நகையும்
7
இன்ப துன்பம்
சந்தோசமும் வேதனையும்
8
ஈவிரக்கம்
அருள் மனம்
9
உயர்வு தாழ்வு
உயர்ந்த நிலையும் தாழ்ந்த நிலையும்
10
ஓட்டமும் நடையும்
வேக வேகமாக
11
கண்ணீரும் கம்பலையும்
அழுகையும் கவலையும்



12
கண்ணும் கருத்தும்
மிகவும் அக்கறை - மிகவும் கவனம்
13
குறை நிறை
குறைந்த - நிறைந்த பண்புகள்
14
நாளும் கிழமையும்
நல்ல நாட்கள்
15
பழக்க வழக்கம்
பண்புகள்
16
பேரும் புகழும்
செல்வாக்கு நிலை


பிரித்து எழுதுக


மரச்சட்டம்
மரப்பொம்பை
மரக்கலம்
மரக்கோயில்
மரப்பாவை
மரவண்டி
மாட்டுச்சந்தை
மரப்பெட்டி
மரச்சட்டம்
மரப்பொம்மை

(ள்,ண்>ட், ல், ன் >ற்)
பொற்கோவில்
பொற்சிலை
பொற்சாலை
கடற்கரை
கடற்தோட்டம்
பொற்குடம்
மட்பாண்டம்
கட்குடம்
மட்பாண்டம்
வாயிற்படி
முட்செடி
முட்புதர்
முட்கொடி
அருண்மொழி
அருட்பா
அருளகம்
பாற்கடல்
பாற்குடம்
குயிற்பாட்டு
நாட்காட்டி
நாட்குறிப்பு

கடலோரம்
கடலலை


கொடியழகு
செடியழகு
விழியழகு
சிலையழகு
பணியழகு
மணியழகு
படையழகு
நிலவழகு
கணிதவியல்
மாடிப்படி

மண்ணாசை
பொன்னழகு
கண்ணழகு
பட்டாடை
வேரூன்றி
நாட்டுக்கோழி
நாட்டுப்பற்று
நாட்டுப்பண்
நாட்டுக்கொடி
ஆற்றோரம்
தரையோரம்
பல்லழகு
பட்டழகு
மாடிப்படி
தீச்சுட்டது
பூப்பூத்தது
பூப்பறித்தான்

மூப்பந்தல்
முக்கோணம்
முச்சாலை
முத்தமிழ்
மும்மூர்த்தி
முப்பால்
பயிற்சி 21 / 2010
கீழ்கண்ட பகுதியைப் படித்து மிகப்பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.


மரத்தின் கிளையில் நின்ற பறவை கால் வலிப்பதாக நினைத்தது. அதனால், அது சிறிது தூரம் வானத்தில் பறந்து செல்ல யோசித்தது. பறக்கும் போது ஒருவேளை சிறகு வலிக்கும் என்று நினைத்து அது மரத்தில் சற்று ஓய்வெடுக்க முடிவு செய்தது. மரத்திலிருந்த அடர்ந்த கிளையைத் தேடி அதில் பறவை சாய்ந்தது. அதற்கு அப்போது ஒரு தனிச் சுகம் கிடைத்தது. பறவை, நல்ல வேளை பறந்து செல்லவில்லை என்று மனத்திற்குள் மகிழ்ச்சி அடைந்தது.

அவ்வழியாக வேடன் ஒருவன் வந்தான். அவன் வெயிலில் களைத்து வந்ததால் மரத்தின் அடியில் அமர்ந்து ஓய்வு எடுத்தான். அப்போது பறவையின் எச்சம் வேடன் மீது பட்டது. மரத்தை நோக்கித் தலையைத் தூக்கி அவன் பார்த்தபோது ஒருமுறை தன் அம்புக்குத் தப்பிய பெரிய கொக்குதான் அது என்று கண்டுபிடித்தான். வேடன் குறிதப்பாது கொக்கைப் பார்த்து அம்பைச் செலுத்தினான். கொக்கு கதறியது.


வினாக்கள்

1. பறவை மரத்தில் தங்க நினைத்ததற்குக் காரணம் என்ன?

1. மரத்தில் ஓய்வெடுக்க நினைத்ததே
2. சிறகு வலிப்பதாக நினைத்ததே
3. கால் வலிப்பதை உணர்ந்ததே
4. கால் வலிப்பதாக நினைத்ததே ( )


2. பறவைக்கு அதிக இன்பம் எப்போது கிடைத்தது?

1. மரத்தில் ஓய்வெடுத்தபோது
2. கிளையில் சாய்ந்தபோது
3. அடர்ந்த கிளையைக் கண்டபோது
4. ஓய்வெடுக்க முடிவு செய்தபோது ( )

1. அம்பு பறவையின் உடலில் ஏன் குத்தியது?

1. பறவை அசையாமல் இருந்ததால்
2. பறவை எச்சம்போட்டதால்
3. பறவை மிகவும் மகிழ்ச்சி அடைந்ததால்
4. நோக்கம் தப்பாமல் அம்பு பாய்ந்ததால் ( )

பகுதியைப்படித்த பின்னர் முப்பது சொற்களில் சுருக்கி வரைக.

______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

பகுதியைப் படித்தபின்னர் கீழ்க்கண்ட வினாக்களுக்குரிய விடைகளைத் தட்டச்சு செய்து அனுப்புக.


1. பறவை மிகவும் மகிழ்ச்சி அடைந்ததற்குக் காரணம் என்ன?
____________________________________________________________________________________________________________________________________________________________


2. பறவை பறந்துசெல்லாததற்கு காரணம் என்ன?

__________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

3. வேடனுக்குக் களைப்பு இல்லாமல் இருந்தால் என்ன நடந்திருக்கும்?
__________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

4. இப்பனுவல் மூலம் நீ அறிந்துகொள்ளும் கருத்துகள் இரண்டைக் குறிப்பிடுக.
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

5. பறவை செய்தது சரியா ஏன்?
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
6. வேடன் செய்தது சரியா? ஏன்?
________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

Thursday, September 2, 2010

சிறுகதை
கருப்பொருள் - உறவுகள்
அடியிற்கானும் பனுவலைப் படித்து வினாக்களுக்கு விடை கூறுக.

பிஞ்சுக் கால்கள்
`அத்தே சிங்கப்பூருக்கு வந்து ரெண்டு நாளாச்சு இன்னைக்கு நம்ம வெளிய போவோமா?` என்று ஆவலுடன் கேட்டாள் வாணி. `ம் போகலாம்` என்று கோமதி பதில் கூறியதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள் வாணி.

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தன் அண்ணன் வீட்டிற்கு இந்தியாவிலிருந்து வந்திருக்கும் கோமதி சோர்வுடன் இருப்பதைத் தன் மதிநுட்பத்தால் புரிந்துகொண்டாள் வாணி.


`நம்ம தங்கியிருந்த குடியிருப்புப் பேட்டையிலிருந்து இப்பப் பாக்கப்போற செந்தோசா வரை எத்தனையோ மாற்றம் .. நீங்க ஆச்சரியப் படுவீக அத்தே` என்று கூறிக் கொண்டே அத்தைக்கு மிகவும் பிடித்தமான ஆரஞ்சுப் பழத்தை நறுக்கித் தட்டில் வைத்து உண்பதற்கு அன்புடன் கொடுத்தாள் வாணி. இருவரும் வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.

`அத்தே இதோ நாம செந்தோசாத் தீவுக்கு
வந்துட்டோ..ம்.` என்று வாணி கூறியவுடன் கண்ணைக் கவரும் கட்டடங்களைக் கண்ட கோமதி மலைத்துப் போனாள்.

இருவரும் மதிய உணவை ஒரு விடுதியில் உண்டபின், `அத்தே நம்ம இப்பக் கடலுக்குப் பக்கத்தில போயி தண்ணீல விளையாடுற பிள்ளைகள பாப்போமா?` என்று கூறியதும் கோமதியின் முகம் மாலை நேரத் தாமரை போல் மாறியது. கண்ணீர் முத்துமுத்தாக வடியத்தொடங்கியது. அவள் தன் முகத்தை வேறுபக்கம் திருப்பியதை உணர்ந்த வாணியின் அகம் வாடியது.

ரிங்.. ... ரிங்.. ... `இந்த நேரத்தில யாரு` என்று கூறிய கோமதி தொலைபேசியில் பேசத்தொடங்கினாள், சுவையான செய்தி, நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்கும் குரல், `என்ன அக்கா எப்படி இருக்க .... `

என்று வெளிநாட்டில் வசிக்கும் தன் பள்ளித் தோழி பானுவுடன் பேசிக்கொண்டே இருந்தாள்.

கால்மணி நேரத்திற்குப் பிறகு குளியலறைக்குத் திடீரென மின்னல் வேகத்தில் ஓடினாள். அவள் அய்யோ அய்யோ என்று அலறும் சத்தம் வீட்டில் வெடித்தது.

பிஞ்சுக் கால்கள் மட்டும் கண்களுக்குத் தென்பட்டன. ஒருவயது அன்பு மகள் எழிலி குளியல்தொட்டியில் தலைகீழாக இருப்பதைக் கண்டாள், கதறினாள், மார்போடு அணைத்தாள்; வெப்பத்தை உணர்ந்தாள்; பெருமூச்சு விட்டாள்!

அவள் கதறிய காட்சி கோமதியின் கண்ணுக்கு மீண்டும் மீண்டும் வந்தது.
வாணியை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் .

(அ) வினாக்கள்

1 வாணியின் சந்தோசத்திற்கு என்ன காரணம்?

2 வாணி எதனைப் புரிந்துகொண்டாள்?

3 வாணியின் அத்தைக்கு மிகவும் பிடித்தமானது எது?

4 வாணியின் விருந்தோம்பல் பண்பைக் கதையின் மூலம் விளக்குக.

5 கோமதி மற்றவர்களிடம் மிகவும் பக்குவமாக நடந்துகொள்ளும் குணம்படைத்தவள் என்பதை எப்படி அறிந்துகொள்ளலாம்?

6 `கோமதியின் முகம் மாலை நேரத் தாமரை போல் மாறியது` இதன் விளக்கம் என்ன?

7 ``கால்மணி நேரத்திற்குப் பிறகு குளியலறைக்கு மின்னல் வேகத்தில் ஓடினாள்`` இவ்வரியின் மூலம் நீ அறிந்துகொள்ளும் செய்தி யாது?

8 ``பிஞ்சுக் கால்கள்`` என்று கதை ஆசிரியர் கூறிய தொடருக்கு நீ என்ன விளக்கம் தர விரும்புகிறாய்?

9 கதையின் முடிவு எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்?

10 குழந்தைக்கு ஏற்பட்ட விபத்தைப் போல் நீ எப்போதாவது கண்டதுண்டா? கேள்விப்பட்டதுண்டா? எங்கே? எப்படி?

11 நீ பழங்களை விரும்பி உண்பாயா? ஏன்?

12 உனக்குப் பிடித்த உணவு எது? ஏன்?

`ஆ` பிரிவு

1 ``பிச்சுக் கால்கள்`` என்ற கதையைப் படித்த பின்னர் உங்கள் குழுவினரோடு சேர்ந்து கதை ஒன்று உருவாக்கிப் படைத்துக் காட்டுக.

2 கதையைப் படித்த பின்னர் குழுவினரோடு சேர்ந்து அதனை நாடக வடிவமாக்கி நடித்துக்காட்டுக.

3 கீழே சில சொற்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை வரிசைப் படுத்தும்போது பொருள் நிறைந்த வாக்கியம் ஒன்று உருவாகும். நீங்கள் உருவாக்கும் அந்த வாக்கியத்திற்கும் இக்கதைக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை விளக்கிக் கூறுக.

நிகழ்வுகளை, குறைந்துவிடும், ஈடுபடும்போது, அக்கம் பக்கத்தில், அறிந்துகொள்ளும், ஒருசெயலில், தன்னை, மறந்து, நடைபெறும், ஒருவர், இயல்பாகக், வாய்ப்பு

கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் திருக்குறளில் உள்ள சொற்கள். அவை மாறி அமைந்துள்ளன. அவற்றை வரிசைப்படுத்தி இக்கதையோடு தொடர்பு படுத்திப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முயற்சி, புகுத்தி விடும், முயற்றின்மை, திருவினை யாக்கும், இன்மை.
(குறள் எண் 616)



`இ` பிரிவு

பாடத்தொடர்ச்சி (வீட்டுப்பாடம்)

1 கொடுக்கப்பட்டுள்ள குறளின் பொருளைக் கண்டறிந்து பகிர்ந்துகொள்க.

ஞாலம் கருதினும் கைகூடும்
காலம் கருதி இடத்தாற் செயின்.
( குறள் எண் 484

2 அகராதியைப் பயன்படுத்திக் கீழ்காணும் சொற்களுக்குப் பொருள் கண்டுபிடித்து வாக்கியம் உருவாக்குக.

1 மதிநுட்பம்
2 பிடித்தமான
3 முத்துமுத்தாக
4 அகம்
5 தென்பட்டன
சிறுகதை
கருப்பொருள் - உறவுகள்
அடியிற்காணும் பனுவலைப் படித்து வினாக்களுக்கு விடை கூறுக.
பிஞ்சுக் கால்கள்
`அத்தே சிங்கப்பூருக்கு வந்து ரெண்டு நாளாச்சு இன்னைக்கு நம்ம வெளிய போவோமா?` என்று ஆவலுடன் கேட்டாள் வாணி. `ம் போகலாம்` என்று கோமதி பதில் கூறியதும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள் வாணி.
ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தன் அண்ணன் வீட்டிற்கு இந்தியாவிலிருந்து வந்திருக்கும் கோமதி சோர்வுடன் இருப்பதைத் தன் மதிநுட்பத்தால் புரிந்துகொண்டாள் வாணி.
`நம்ம தங்கியிருந்த குடியிருப்புப் பேட்டையிலிருந்து இப்பப் பாக்கப்போற செந்தோசா வரை எத்தனையோ மாற்றம் .. நீங்க ஆச்சரியப் படுவீக அத்தே` என்று கூறிக் கொண்டே அத்தைக்கு மிகவும் பிடித்தமான ஆரஞ்சுப் பழத்தை நறுக்கித் தட்டில் வைத்து உண்பதற்கு அன்புடன் கொடுத்தாள் வாணி. இருவரும் வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.
`அத்தே இதோ நாம செந்தோசாத் தீவுக்கு வந்துட்டோ..ம்.` என்று வாணி கூறியவுடன் கண்ணைக் கவரும் கட்டடங்களைக் கண்ட கோமதி மலைத்துப் போனாள்.
இருவரும் மதிய உணவை ஒரு விடுதியில் உண்டபின், `அத்தே நம்ம இப்பக் கடலுக்குப் பக்கத்தில போயி தண்ணீல விளையாடுற பிள்ளைகள பாப்போமா?` என்று கூறியதும் கோமதியின் முகம் மாலை நேரத் தாமரை போல் மாறியது. கண்ணீர் முத்துமுத்தாக வடியத்தொடங்கியது. அவள் தன் முகத்தை வேறுபக்கம் திருப்பியதை உணர்ந்த வாணியின் அகம் வாடியது.
ரிங்.. ... ரிங்.. ... `இந்த நேரத்தில யாரு` என்று கூறிய கோமதி தொலைபேசியில் பேசத்தொடங்கினாள், சுவையான செய்தி, நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்கும் குரல், `என்ன அக்கா எப்படி இருக்க .... `
என்று வெளிநாட்டில் வசிக்கும் தன் பள்ளித் தோழி பானுவுடன் பேசிக்கொண்டே இருந்தாள்.
கால்மணி நேரத்திற்குப் பிறகு குளியலறைக்குத் திடீரென மின்னல் வேகத்தில் ஓடினாள். அவள் அய்யோ அய்யோ என்று அலறும் சத்தம் வீட்டில் வெடித்தது.
பிஞ்சுக் கால்கள் மட்டும் கண்களுக்குத் தென்பட்டன. ஒருவயது அன்பு மகள் எழிலி குளியல்தொட்டியில் தலைகீழாக இருப்பதைக் கண்டாள், கதறினாள், மார்போடு அணைத்தாள்; வெப்பத்தை உணர்ந்தாள்; பெருமூச்சு விட்டாள்!
அவள் கதறிய காட்சி கோமதியின் கண்ணுக்கு மீண்டும் மீண்டும் வந்தது.
வாணியை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் .
(அ) வினாக்கள்
1
வாணியின் சந்தோசத்திற்கு என்ன காரணம்?
2
வாணி எதனைப் புரிந்துகொண்டாள்?
3
வாணியின் அத்தைக்கு மிகவும் பிடித்தமானது எது?
4
வாணியின் விருந்தோம்பல் பண்பைக் கதையின் மூலம் விளக்குக.
5
கோமதி மற்றவர்களிடம் மிகவும் பக்குவமாக நடந்துகொள்ளும் குணம்படைத்தவள் என்பதை எப்படி அறிந்துகொள்ளலாம்?
6
`கோமதியின் முகம் மாலை நேரத் தாமரை போல் மாறியது` இதன் விளக்கம் என்ன?
7
``கால்மணி நேரத்திற்குப் பிறகு குளியலறைக்கு மின்னல் வேகத்தில் ஓடினாள்`` இவ்வரியின் மூலம் நீ அறிந்துகொள்ளும் செய்தி யாது?
8
``பிஞ்சுக் கால்கள்`` என்று கதை ஆசிரியர் கூறிய தொடருக்கு நீ என்ன விளக்கம் தர விரும்புகிறாய்?
9
கதையின் முடிவு எப்படி இருக்கும் என்று நினைக்கிறாய்?
10
குழந்தைக்கு ஏற்பட்ட விபத்தைப் போல் நீ எப்போதாவது கண்டதுண்டா? கேள்விப்பட்டதுண்டா? எங்கே? எப்படி?
11
நீ பழங்களை விரும்பி உண்பாயா? ஏன்?
12
உனக்குப் பிடித்த உணவு எது? ஏன்?
`ஆ` பிரிவு
1
``பிச்சுக் கால்கள்`` என்ற கதையைப் படித்த பின்னர் உங்கள் குழுவினரோடு சேர்ந்து கதை ஒன்று உருவாக்கிப் படைத்துக் காட்டுக.

2
கதையைப் படித்த பின்னர் குழுவினரோடு சேர்ந்து அதனை நாடக வடிவமாக்கி நடித்துக்காட்டுக.

3
கீழே சில சொற்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றை வரிசைப் படுத்தும்போது பொருள் நிறைந்த வாக்கியம் ஒன்று உருவாகும். நீங்கள் உருவாக்கும் அந்த வாக்கியத்திற்கும் இக்கதைக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பதை விளக்கிக் கூறுக.

நிகழ்வுகளை, குறைந்துவிடும், ஈடுபடும்போது, அக்கம் பக்கத்தில், அறிந்துகொள்ளும், ஒருசெயலில், தன்னை, மறந்து, நடைபெறும், ஒருவர், இயல்பாகக், வாய்ப்பு


கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்கள் திருக்குறளில் உள்ள சொற்கள். அவை மாறி அமைந்துள்ளன. அவற்றை வரிசைப்படுத்தி இக்கதையோடு தொடர்பு படுத்திப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

முயற்சி, புகுத்தி விடும், முயற்றின்மை, திருவினை யாக்கும், இன்மை.
(குறள் எண் 616)

`இ` பிரிவு

பாடத்தொடர்ச்சி (வீட்டுப்பாடம்)
1
கொடுக்கப்பட்டுள்ள குறளின் பொருளைக் கண்டறிந்து பகிர்ந்துகொள்க.


ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின். ( குறள் எண் 484

2
அகராதியைப் பயன்படுத்திக் கீழ்காணும் சொற்களுக்குப் பொருள் கண்டுபிடித்து வாக்கியம் உருவாக்குக.
1
மதிநுட்பம்
2
பிடித்தமான
3
முத்துமுத்தாக
4
அகம்
5
தென்பட்டன