Sunday, April 19, 2009

இலக்கியம் – பயிற்சி வினா

இலக்கியம் – பயிற்சி வினா

1 பின்னிணைப்பு 1-இல் கொடுக்கப்பட்டுள்ள இலக்கியம் – பயிற்சி வினா படித்து அதன் நயத்தினை விளக்கி எழுதுக.

2 பின்னிணைப்பு 2-இல் கொடுக்கப்பட்டுள்ள கதையைப் படித்துத் திறனாய்வுக் கண்ணோட்டத்தில் கதைக்கரு, நிகழ்ச்சிப் பின்னல், பாத்திரப்படைப்பு, மொழிநயம் முதலியவற்றை விளக்கி எழுதுக.


பூமியைப்புனிதத் தாயென்றும்

புகழ்பெற்ற கங்கையை

அன்னையென்றும் நெடுங்காலமாய்ப்

போற்றி வந்தோம்

நம்மில்லவாழ் அன்னைதனை

என்றென்றும் போற்றுமுகமாய்

எழிலுடன் வணங்கிடவே

எடுத்திட்டோம் அன்னையர் தினம்!


வாழட்டு மன்னையர்புகழ்

வளமானநம் நாடுதனிலென்று

கொட்டிடுவோம் முழவுதனை

எல்லாரும் கேட்டிடவே

வாழ்க அன்னையர்தினம்

வளமான நெஞ்சுதனில் - நம்

இல்லந்தோறுங் கொண்டாடி

இல்லாரு மின்பமடைவோமே !

- குருசாமி





கனியும் மனம்!


அவனுகுள் எழுந்த இந்த மாற்றம், அறுபதைத் தாண்டியபோது, வாழ்க்கையில் சுறுசுறுப்பைத் தவிர வேறு எதையும் கண்டதில்லை அமுதன்.

ம்.. எப்பொழுதும் வாழ்க்கையைத் திட்டமிடுதல், உயர்வை எண்ணிப் போராடுதல் இவற்றைத் தவிர எதையும் பார்த்ததில்லை அவன். பிள்ளைப் பருவ உணர்வு அவனைத் தூண்டியது

`வாழ்கையின் இலக்கணம் அமுதன்` இது ஊரார் கூற்று.

கமலா அமுதனின் மனைவி. அன்பிற்கு இலக்கணம் கண்டவள். குடும்பத்தைத் தவிர வேறு எதையும் அறியாதவள். கணவனே கண் கண்ட தெய்வமாக வாழ்ந்துகொண்டிருப்பவள்.

படித்துப் பட்டம் பெற்ற அன்புச் செழியன், ___ய்வுப் பட்டத்தை முடிக்கத் துடிக்கும் அகிலன்.. இவர்களின் வாழ்க்கையோட்டத்தோடும் தன்னைக் கரைத்தவள்தான் அவள் ..

எஞ்சியுள்ள காலத்தையும் இதுபோல் கழிப்போம் என்ற உணர்வு அவளுக்குள் இல்லாமல் இல்லை. அப்பாவி பெண்.. அழுதுகூடப் பார்த்ததில்லை..

படுக்கை அறையில் இருக்கும்போதும் இல்லறப் பணி முடிந்தபோதும் தன்னைப் பற்றிச் சிந்திக்க மறந்தவள் ...

இன்னும் சொல்லப்போனால் .. அவள் ஓர் ஒளிவிடும் மெழுகு வர்த்தி!
இன்று அவள் மனம் கல்பாறை பனிப்பாறையாக உருகும்போது மகிழ்ச்சி கண்டது.

கமலா.. கமலா .. இனி நாம் இரவில் சேர்ந்து சாப்பிடுவோம்
சப்பாத்தி றினாலும் பரவாயில்லை .. ஒன்றும் நினைக்காதே என்று கூறியபோது அவளுக்குள் ____யிரம் வண்ணச் சிறகுகள்
முளைக்கத்தொடங்கினனந்த வெள்ளத்தில் மூழ்கினாள் .. அமுதன் மடியில் சாய்ந்தாள்

நெஞ்சுக்குள் யிரம் மருத்துவர் சொன்னபோது வாழ்க்கையில் செய்ய மறந்த செயல்கள் மீண்டும் முளைத்தன அவனுக்குள். அய்யகோ என்று அலறினான் அமுதன்.

தாய்க்கு வணக்கம் சொல்லிவிட்டு தாம் வாழும் நாடு நோக்கிப் பறந்தனர் அன்பறியா பிள்ளைகள் ..
கதை சிரியர் -
சி. குருசாமி


மரபுத்தொடர்கள் (சி. குருசாமி)


மரபுத்தொடர்கள் (சி. குருசாமி)
---------------------------------------------

ஏட்டிக்குப் போட்டி

குமுதாவும் அல்லியும் எப்பொழுதும் தம் தோழிகளிடம் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசி வாக்குவாதம் செய்து கொண்டிருப்பார்கள்.

ஒரு கை பார்ப்பேன்

கோபு மதிப்பெண்ணின் பட்டியலில் முதலிடத்தை இழந்ததால் அடுத்த முறை ஒருகை பார்பேன் என்று தம் நண்பனிடம் கூறினான்.

ஒளிவு மறைவின்றி

அன்பரசி தம் அம்மாவிடம் ஒளிவு மறைவின்றிப் பேசும் பழக்கத்தை உடையவளாக இருந்ததால் அவளது அம்மா அவள் மீது மிகவும் அன்பு செலுத்தி வந்தார்.


ஓட்டைக் கை

டேவிட் ஓட்டைக் கையனாக இருந்ததால் அவனது பெற்றோர் அவனது செலவுக்கு அதிகப் பணம் கொடுக்க மாட்டார்கள்.

ஓட்டை வாயன்

பிரபு ஓட்டைவாயனாக இருந்ததால் அவனது நண்பர்கள் அவனிடம் மனம் திறந்து சில உண்மைகளைப் பேசமாட்டார்கள்.

கட்டுக் கதை

கமலா கட்டுக் கதை கூறுவதில் கெட்டிக்காரியாக இருந்ததால் அவளது தோழிகள் அவளிடம் எப்பொழுதும் எச்சரிக்கையாகவே இருப்பார்கள்.
கம்பி நீட்டினான்


அழகனின் சங்கிலியைத் திருடிய திருடன் காவலர்களைக் கண்டதும் அங்கிருந்து கம்பி நீட்டினான்.

கண்மூடித்தனம்

மீரான் கண்மூடித்தனமாக மற்றவர்கள் கூறும் கருத்தை எப்பொழுதும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

நட்டாற்றில் விட்டான்

கபிலன் திருமணச் செலவிற்கு வேண்டிய பணத்தைத் தருவதாகச் சொல்லி கடைசி நேரத்தில் அவனது நண்பனை நட்டாற்றில் விட்டான்.

பகல் கனவு

தமிழரசன் தேர்வுக் குரிய பாடங்களைச் சரியாகப் படிக்காமல் உச்சமதிப்பெண்கள் பெற நினைத்தது பகல் கனவாக முடிந்தது.

பல்லைக் காட்டி

வளவன் தம் முதலாளிடம் பல்லைக் காட்டி தாம் விரும்பிய சம்பள உயர்வைப் பெற்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தான்.

புத்தகப் புழுஅரசி புத்தகப் புழுவாக இருக்காமல் உலக நடப்புகளைப் பற்றியும் தெரிந்து வைத்திருந்ததால் பத்துக் காலத்தில் பல நன்மைகளை அடைந்தாள்.

பூசி மெழுகுதல்

குமாரின் நண்பர்கள் அவன் செய்யும் சிறு சிறு தவறுகளைச் சுட்டிக் காட்டிக் காட்டாமல் பூசி மெழுகியதால் அவன் பெரிய தவறுகளைச் செய்யத் தொடங்கினான்.

வாய்க் கொழுப்பு

கவிதாவுக்கு வாய்க் கொழுப்பு அதிகமாக இருந்ததால் அவள் அவளது தோழிகளின் மனம் வருந்தும்படி செய்து கொண்டிருப்பாள்.

வாலாட்டினான்.

முத்து உடன்படிக்கும் மாணவர்களிடம் வாலாட்டியதால் தலைமை சிரியர் முத்துவை அழைத்து அவனைத்திருந்தும்படி லோசனை கூறினார்.

வெளுத்து வாங்கியதால்

பிரபு பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு வெளுத்து வாங்கியதால் அவனுக்கு முதல் பரிசு கிடைத்தது.



இணைமொழிகள் ( சி. குருசாமி)


அருமை பெருமையை


பெற்றோர்கள் பிள்ளைகளின் அருமை பெருமையை அறிந்ததால் அவர்கள் தவறு செய்யும் போது கண்டித்து நல்வழிப்படுத்தினர்.

அக்கம் பக்கம்

குமார் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அன்பாகப் பழகும் குணம் உடையவனாக இருந்ததால் அவனை அவர்கள் மிகவும் விரும்பினார்கள்.

அல்லும் பகலும்

பிரசாந் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்ததால் அல்லும் பகலும் கடுமையாக உழைக்கத் தொடங்கினார்.

டல் பாடல்

நம் முன்னோர்கள் டல் பாடல் கலையைப் போற்றி வளர்த்து வந்துள்ளதால் இன்று அவற்றை நாம் ரசித்து மகிழ்ந்து வருகிறோம்.

டை அணி

வேணி திருமண வீட்டிற்குச் செல்லும் போது விலை உயர்ந்த டை அணிகளை அணிந்து சென்றாள்.

குறை நிறைகளை

நாம் ஒருவரின் குறை நிறைகளை நன்றாக ய்வு செய்த பின்னர் தான் அவரிடம் பழகத் தொடங்க வேண்டும்.

நாளும் கிழமையும்

தமிழர்கள் திருமண நாளைத் தேர்ந்தெடுக்கும் போது நாளும் கிழமையும் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பழக்க வழக்கம்

நாம் சிறந்த பழக்க வழக்கங்களைச் சிறு பிள்ளைகளாக இருக்கும் போதே பின்பற்றினால் எதிர்காலத்தில் சிறந்த முறையில் வாழலாம்.

பேரும் புகழும்

திரு லீ பேரும் புகழும் பெற்ற தலைவராக விளங்கி வந்ததால் அவர் வரலாற்றில் இன்றும் நிலைத்து நிற்கிறார்.




உவமைத் தொடர்கள் (சி. குருசாமி)


அகல்வாரைத் தாங்கும் நிலம் போல


பெற்றோர்கள் அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல பிள்ளைகள் செய்யும் சிறு சிறு தவறுகளைப் பொறுத்துக் கொள்வர்


அடியற்ற மரம் போல


தாய் போர்களத்தில் தம் மகன் பெரிய காயம் பட்ட செய்தியைக் கேட்டவுடன் அடியற்ற மரம் போலக் கீழே சாய்ந்தார்.


அணை கடந்த வெள்ளம் போல

மேடைப் பேச்சாளர் அணை கடந்த வெள்ளம் போலத் தொடர்ந்து பேசி மக்களைக் கவர்ந்து மகிழ்ச்சி அடைந்தார்.

அனலில் இட்ட மெழுகு போல

குஜராத்தில் நடைபெற்ற பூகம்பத்தைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் கோபு அனலில் இட்ட மெழுகு போல துடித்தான்.

இலை மறை காய் போல

குமரன் செய்த தவற்றை அவனது சிரியர் இலை மறை காய் போல சுட்டிக் காட்டி அவனைத் திருத்தினார்.


உயிரும் உடலும் போல

கபிலரும் பாரியும் உயிரும் உடலும் போல எப்பொழுதும் ஒன்றாகவே இருந்தனர்.


ஊமை கண்ட கனவு போல


பல்லவன் தாம் கண்ட திருட்டுச் சம்பவத்தைப் பற்றிய செய்தியை வெளியில் சொல்லமுடியாமல் ஊமை கண்ட கனவு போல இருந்ததால் அவனது மனம் பாதிப்படைந்தது.


எலியும் பூனையும் போல


முல்லைக் கொடியும் அவளது தங்கையும் எலியும் பூனையும் போலச் சண்டை போட்டுக் கொண்டிருந்ததால் அவர்களது பெற்றோர் கண்டித்தனர்.

Monday, April 6, 2009

கடித வினா.

கடித வினா. (150 சொற்கள்)

1. நீவிர் உமது குடும்பத்தினரோடு திறந்தவெளி உணவங்காடிக்கு உணவு உண்ணச் சென்றிருந்தீர். அங்குப் பரிமாறிக்கொண்டிருந்தவர் கையுறை அணியாமல் உணவைக் கையாண்டார். இது போன்ற நிலைகளை நீவிர் பல இடங்களில் நடைபெற்றுவருவதைப் பார்த்திருப்பீர். இவற்றை விளக்கி நீவிர் சுற்றுப்புற அமைச்சுக்கு எழுதும் ஒரு கடிதம்.

(இவ்வினாவிற்கு விடையளிக்கும்போது உமது பெயரையும் முகவரியையும் குறிப்பிடாமல் ``பாரதி`` என்ற புனைபெயரையும், புளோக் 219, ங் மோ கியோ அவென்யூ 6 # 12-42, சிங்கப்பூர் 260219 என்னும் முகவரியையும் குறிப்பிடுக.)
சுகாதார அமைச்சின் முகவரி: சுகாதார அதிகாரி சுற்றுப்புற அமைச்சு ஸ்காட்ஸ்சாலை சிங்கப்பூர்260112 *********************************************************************

விடை

பாரதி
புளோக் 116
சிராங்கூன் செண்ட்ரல்
# 11-46சிங்கப்பூர் 260116

04.04.2006

சுகாதார அதிகாரி
சுற்றுப்புற அமைச்சு
ஸ்காட்ஸ் சாலை
சிங்கப்பூர் 260112

மதிப்பிற்குரிய ஐயா

பொருள்: சுகாதாரக் குறைபாடு குறித்துக் கருத்துக் கூறுதல்

என் பெயர் பாரதி. நான் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். நான் உணவங்காடியிலும் பொது இடங்களிலும் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்காத ஒருசிலரைப் பற்றி இக்கடிதத்தில் எழுதுகிறேன்.


நான் எங்கள் குடும்பத்தினரோடு சென்ற வாரம் திறந்த வெளி உணவங்காடிக்குச் சென்றிருந்தேன். உணவங்காடியில் உணவு பரிமாறிக் கொண்டிருந்தவர் கையுறை அணியாமல் உணவைக் கையாளுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இது போன்று வேறு சிலரும் பொது இடங்களில் சுகாதாரமற்ற முறையில் நடந்து கொண்டது என்னை மிகவும் வருத்தத்திற்குள்ளாக்கியது. எனவே, சுகாதாரத்தைப் பற்றிய தகவல்களை அறியாதோருக்குச் சுற்றுப் புற அமைச்சு சுகாதாரத்தைப் பற்றி எடுத்துரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


நம் முன்னோர், `வரும்முன் காக்கவேண்டும்` என்று கூறியுள்ளனர். நமக்கு நோய்வராமல் இருக்க முதலில் சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, அதன் அருகில் இருந்த மீன் கடைக்குச் சென்ற போது மீன்விற்பவர் நடைபாதையின் அருகில் எச்சிலைத் துப்பினார். இதனைக் கண்டதும் என்மனம் வாடியது. ``சுத்தம் சுகம் தரும்`` என்ற பழமொழியை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ளவேண்டும். சுகாதார அமைச்சு சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் பட்டறைகளைப் பல இடங்களில் நடத்தலாம். இவற்றின் மூலம் மக்கள் அதன் முக்கியத்துவத்தை உணரும் வாய்ப்பு ஏற்படும்.
சுத்தத்தைக் கடைப்பிடிப்போம்சுகாதாரமாய் வாழ்ந்திடுவோம் இச்சையுடன் இனிதே இருக்கும்வரை தொடர்ந்திடுவோம்
என்பது போன்ற கூற்றினை பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் எழுதிவைக்கலாம். நமது சிங்கை ஒரு தூய்மை மிக்க நாடாகத் தொடர்ந்து இருப்பதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன். மேலும், இவற்றின் மூலம் வருங்காலத்தில் சார்ஸ், டெங்கி போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் சிங்கப்பூரில் வராமல் தடுக்கலாம் என்று கூறி என்கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
பாரதி

இணையத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து வெளிநாட்டில் இருக்கும் தோழன் / தோழிக்கு நீ எழுதும் கடிதம்.


(கடிதத்தில் உன்பெயரை அல்லி என்றும் முகவரியை 14 அலெக்ஸாண்டர் சாலை, கட்டட எண் 32 #13-02 சிங்கப்பூர் 222632 என்றும் குறிப்பிடுக).


அல்லிகட்டட எண் 32#13-02
அலெக்ஸாண்டர் சாலை
சிங்கப்பூர் 222632
03.04.2009



அன்புள்ள தோழி அல்லிக்கு,


இங்கு நானும் எனது குடும்பத்திலுள்ளவர்களும் நலமாக இருக்கிறோம். அதுபோல் அங்குள்ள நீயும் உனது குடும்பத்தினர்களும் நண்பர்களும் நலமுடன் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உடல் நலமில்லாமல் இருந்த உனது பாட்டி இப்பொழுது எப்படி இருக்கிறார்? அவரை நான் மிகவும் விசாரித்ததாகச் சொல். உனது அண்ணன் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு நல்ல பணி கிடைக்க நான் இறைவனிடம் வேண்டுகிறேன்.

நீ சென்ற கடிதத்தில் இணையத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து என்னை உனக்குக் கடிதம் எழுதச் சொன்னாய். இன்றைய உலகில் இணையத்தால் ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன. நாம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், உலகோடு ஒட்டி வாழ்`` என்பதற்கு ஏற்ப நமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள இணையம் மிகவும் உதவி செய்கிறது. இன்றைய சூழ்நிலையில் நாள் தோறும் வெளிவருகின்ற செய்தித் தாள்களைக் கூட நம்மால் பொறுமையாக அமர்ந்து படிக்க முடியவில்லை; படிக்க நினைத்தாலும் நேரம் கிடைப்பதில்லை. உலகில் வெளிவரும் செய்திகள் அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இணையத்தால் ஏற்படுகிறது.

அதுமட்டுமல்ல தமிழிலும் ஏராளமான இணையப்பக்கங்கள் உள்ளன. அவற்றில் பழங்காலத் தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் சேகரித்து வைத்துள்ளனர். இவற்றின் மூலம் நமது பண்பாட்டைப் பற்றியும் பாரம்பரியத்தைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ளலாம். இவ்விலக்கியச் செய்திகளை நாம் படிக்கும் போது நமது முன்னோர்களைப் பற்றிய அரிய செய்திகள் நம் நெஞ்சில் `பசு மரத்தாணி போல` பதிந்து விடுகிறது.
இன்றைய உலகம் மிகவும் சுருங்கி விட்டது. எந்த நாட்டிற்குப் போகவேண்டுமானாலும் நமது பயணச் சீட்டுகளை முன்கூட்டியே இதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். உலக நாடுகளின் பொருளாதாரத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம். வேலை வாய்ப்புகளையும் அறிந்து கொள்ளலாம்
.
``புத்திமான் பயில்வான் வான்`` என்ற பழமொழிக்கு ஏற்ப நாம் சிறந்து விளங்க எப்படிப்பட்ட கல்வியைக் கற்க வேண்டும் என்று தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பும் ஏற்படுகிறது. இதன் மூலம் எளிமையாகப் புரியும் பாடங்களையும் விரும்பிய பாடங்களையும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினைப் பெறுகிறோம். உடல் நலமில்லாதவர்கள் சிறந்த மருத்துவர்களிடம் இணையத்தின் மூலம் மருத்துவ லோசனையும் பெறலாம்.

மருத்துவர்கள் ஒரு நாட்டில் அறுவைச் சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றொரு நாட்டில் இருக்கும் மருத்துவர்களிடம் உடனுக்குடன் லோசனை பெறவும் இணையம் மிகவும் உதவி செய்கின்றது. நம்மைப் போன்று படிக்கும் மாணவர்கள் பாடங்களைப் பற்றி விரிவாகப் படிக்கவும் செயல் திட்டங்களை எளிமையாக முடிக்கவும் உதவி செய்கின்றது.
இக்கடிதத்தில் எழுதியுள்ள கருத்துகள் மூலம் இணையத்தால் ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை நீ அறியலாம். இதுபோல் விளையாடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி விரிவாக எனக்குக் கடிதம் ஒன்று எழுதும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு

உன் அன்புத்தோழி
அல்லி.


கடிதம் செல்ல வேண்டிய முகவரி

. வளர்மதி,
22 அண்ணா சாலை,
சென்னை 600022,
தமிழ் நாடு,
இந்தியா.




கடிதம் எழுதும் போது கவனிக்க வேண்டியவை.



• கடிதம் எந்தப் பிரிவைச் சேர்ந்தது (அலுவலகக் கடிதம் அல்லது உறவுக் கடிதம்) என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.•


அனுப்புநர் முகவரியைத் தொடக்கத்திலும் அதன்பின்னர் தேதியையும் தேதிக்கு அடுத்து விழிப்பையும் (அன்புள்ள தோழிக்கு) கடிதம் எழுதிய பின்னர் கடிதம் செல்ல வேண்டிய முகவரியையும் உறவுக் கடிதத்தில் எழுதவேண்டும். •


தொடக்கத்தில் நலம் விசாரித்தல் (உறவுக் கடிதத்தில்) -

ஒரு பத்தி• தலைப்பைப் பற்றிய விளக்கம் –

இரண்டு பத்திகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும் -

தலைப்பை ஒட்டிச் செல்ல வேண்டும்.•

கடிதத்தின் முடிவு - எழுதிய செய்திகளின் சுருக்கம் -

ஒரு பத்தி போதும்.• கேட்கப்பட்ட சொற்களின் எண்ணிக்கையில் கட்டாயம் எழுத வேண்டும் -

சொற்களை அடிக்கடி எண்ணக் கூடாது - கருத்தோட்டம் தடைபடும்.•

முடிவில் உள்நாட்டிற்கு அனுப்பும் கடிதமா? வெளிநாட்டிற்கு அனுப்பும் கடிதமா? என்பதை மனத்தில் கொண்டு கடிதம் செல்ல வேண்டிய முகவரியை எழுத வேண்டும்.

கட்டுரை

சிங்கப்பூர் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ற நாடாகத் திகழ்கிறது: கருத்துரைக்க. உமது கட்டுரை சுமார் சொற்களுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.


இன்றைய உலகம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி எல்லா நாடுகளிலும் சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஒரு நாட்டின் தட்பவெப்பம் இயற்கை அமைப்பு ட்சிமுறை போன்றவை சிறப்பாக அமையும் போது அந்த நாட்டில் வாழும் மக்கள் மிகவும் சிறப்பாக வாழ்வார்கள். இத்தகைய சூழல் எல்லா நாட்டிலும் சிறப்பாக அமைந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. இருப்பினும் ஒவ்வொரு நாடு இருக்கின்ற வசதிகளைப் பொருத்து முன்னேறி வருகின்றன. இவற்றை எல்லாம் கொண்டு பார்க்கின்ற போது நம்நாடு வாழ்வதற்கு ஏற்ற சிறந்த இடமாக அமைந்துள்ளது என்று கூறலாம்.

நாட்டைப் பற்றி இலக்கணம் கூற வந்த வள்ளுவர்,
கியவை அமைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். ஒரு நாடு சிறந்த நாடாக விளங்குவதற்கு அந்நாட்டு மக்கள் முதல் காரணமாக அமைகின்றனர் என்று சொல்லலாம். மிகக் குறைந்த இயற்கை வளத்தை உடைய நம் நாட்டில் மக்களின் கடின உழைப்பு முதலிடத்தைப் பெறுகிறது. இவர்கள் கடுமையாக உழைப்பதற்கு ஏற்ற வாய்ப்பும் இங்குக் காலங்காலமாக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்று கூறலாம். இங்கு உழைப்பு முதலிடத்தைப் பெறுவதால் அந்த உழைப்பை நம்பி வாழும் மக்கள் இதனை சிறந்த இடமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறலாம்.

கல்வியில் சிறந்த நாடே உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பதைக் காணலாம். இதனைத்தான் வள்ளுவர் ``கண்ணுடையோர் என்போர் கற்றோர்`` என்று கூறுகிறார். இங்கு வாழும் மக்கள் அனைவரும் கட்டாயம் கற்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் தலையாக நோக்கமாக அமைந்துள்ளது. ரம்பக்கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் கல்வி கற்பதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதில் சமூக அமைப்புகளும் அரசாங்கமும் மிகவும் கவனமாக இருக்கின்றன. இவை படிப்பதற்கு வேண்டிய அடிப்படை வசதிகளைச் செய்து தருகின்றன. `வானமே எல்லை` என்பதற்கு ஏற்ப எங்கும் சென்று கல்வி அறிவை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பு இங்கு அதிகமாகச் செய்து தரப்படுகிறது.

இங்கு வாழும் மக்கள் தொழிற்சாலைகளின் மூலமும் கல்வி அறிவைப் பெருக்கிக் கொள்வதன் மூலமும் வாழ்க்கை வசதியைப் பெருக்கிக் கொள்கின்றனர். மக்கள் தங்களின் தகுதியை மேம்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற சூழலும் உருவாக்கிக் தரப்படுகிறது. இதனால் மக்களின் பொருளாதாரம் சிறந்த நிலையில் அமைந்து வாழ்க்கைத் தரமும் மேம்பட்டுவருகிறது. இன்றைய உலகில் மனிதனின் தேவையை நிறைவேற்றி வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை இங்கும் பயன்படுத்தப்படுகின்றன. மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேறியுள்ளன. புத்தம் புதிய உலகத்தைப் போல் இந்நாடு விளங்கிவருகிறது.

இன்று உலகில் ஒருசில நாட்டில் வாழும் மக்கள் அமையில்லாமல் வாழ்கிறார்கள். அவற்றில் போரும் பூசலும் நிறைந்து காணப்படுகின்றன. சிங்கப்பூரின் நிலை முற்றிலும் மாறுபட்டது. இது, பாதுகாப்பு நிறைந்த நாடாக விளங்கி வருகிறது. இளையர்கள் அனைவருக்கும் கட்டாய இராணுவ சேவையில் பங்குகொள்கின்றனர். இதன் மூலம் உடலும் உள்ளமும் வலுப்பெற்று விளங்குகின்றனர். `` அச்சமில்லை அச்சமில்லை அச்ச மென்பது இல்லையே`` என்ற பாடல் வரிக்கேற்ப இளையர்களின் வாழ்க்கை அமைந்துள்ளது. பொது மக்கள் இரவு பகல் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நம்மையும் தீமையும் பிறர் தர வாரா என்ற பொன்மொழியை மனத்தில் கொண்டு வாழ்ந்தால் நிறைவாக வாழலாம்.

உலக அரங்கில் சிங்கப்பூர் ஒரு பசுமை நிறைந்த நகரமாக காட்சியளிக்கிறது. எங்குப் பார்த்தாலும் பச்சை நிறமாகத் தெரிகிறது. பச்சை நிறம் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் நிறமாகும். மனத்திற்குப் புத்துணர்ச்சியை அளிக்கும் நிறமாகும். மேலும், இங்குச் சுகாதாரம் பேணிக்காக்கப்படுகிறது. ``சுத்தம் சுகம் தரும்`` என்ற பொன்மொழியை மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். சுருக்கமாகச் சொல்வோமானால், சுத்தமான குடிநீர், ஒழுகாத வீடு, தரம் நிறைந்த சாலைகள், சிறந்த உல்லாசப் பொழுபோக்குகள், சிறந்த உணவு மையங்கள், சிறந்த கல்விக்கூடங்கள், உலகத்தரம் வாய்ந்த பல்கலைக் கழகங்கள் போன்றவை இங்கு அமைந்து மக்கள் வாழ்வதற்குச் சிறந்த இடமாக இந்நாடு விளங்குகிறது என்று கூறலாம்.










______________________________________________________________________________________________

************************************************************************************

ஓர் இலட்சியக் குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று நீவிர் கருதுகிறீர்?

``குடும்பம் கோவிலுக்கு ஒப்பாகும்`` என்பது நமது முன்னோர்களின் வாக்கு. இக்கோவிலைக் கட்டிக்காப்பது நமது கடமையாக இருக்கிறது. ஒரு குடும்பத்தின் அமைப்பைப் பொறுத்தே அந்தக் குடும்பத்தில் வாழ்வோரின் வாழ்க்கைத் தரம் அமைகிறது. சிறந்த குடும்பம் அமைவதற்குச் சில திட்டங்கள் அவசியம் தேவைப்படுகின்றன. இந்தத் திட்டங்களின் தொகுப்பாக ஓர் இலட்சியக் குடும்பம் விளங்குகிறது. எனவே, ஓர் இலட்சியக் குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
ஓர் இலட்சியக் குடும்பம் பிணைப்பு மிக்க குடும்பமாக இருக்க வேண்டும். அக்குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு நடக்கவேண்டும். ``மூத்தோர் சொல்லும் வார்த்தை அமிர்தம்`` என்ற தத்துவத்தைப் பின்பற்றுவதாக இருக்க வேண்டும். மூத்தோர் ஒருசில நேரங்களில் கோபத்தில் சிலவற்றைச் சொன்னாலும் குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் அக்கோபத்தைப் பொறுத்துக் கொள்ளும் பண்பினைப் பெற்றிருக்க வேண்டும். பிணைப்பு மிக்க குடும்பம் சிறப்புப் பெற்ற குடும்பமாகக் காலப்போக்கில் மாறும். அக்குடும்பத்தில் அன்பு நிறைந்திருக்கும். அது வள்ளுவரின், ``அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது`` குறளுக்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும்.

குடும்பத்திலுள்ள அனைவரும் கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும். ``கற்கை நன்றே கற்கை நன்றே`` என்ற முதியோர் வாக்கிற்கேற்பக் கல்வியின் சிறப்பினை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். குடும்பத்தில் எப்படிப்பட்ட `ஏற்றத் தாழ்வு` ஏற்படினும் கல்விக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும் முன்னுரிமையையும் கொடுக்க மறக்கக் கூடாது. வறுமையான குடும்பமாக இருந்தாலும் சிறந்த கல்வி அறிவைப் பெறும் போது உயர்ந்த வாழ்க்கைத் தரம் உடையதாக அமைவற்குரிய வாய்ப்பு ஏற்படும்.

குடுபத்திலுள்ளோர் சிறந்த ஒழுக்கக் கூறுகளை உடையவர்களாக இருக்க வேண்டும். ஒழுக்கக் கேடு வந்துவிடாமல் கண்ணும் கருத்துமாக அக்குடும்பத்தைக் காக்க வேண்டும். ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்ற குறள் வரியைப் பொன்னே போல் போற்றிப் பின்பற்ற வேண்டும். இதனைப் பின்பற்றும் போது சிறந்த பண்புடைய குடும்பமாக மாறும். அக்குடும்பம் மற்றவர்களின் நன்மதிப்பைப் பெறும். ___ல்லொழுக்கமுடைய குடும்பத்தினரோடு தொடர்புடையவர்களாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பமும் சிறந்த சமுதாயத்தைச் சமைக்கும் ற்றல் பெற்றதாக இருக்க வேண்டும். சமூகப் பண்புகளை எப்பொழுதும் மறக்கக் கூடாது. தாம் வாழும் நாட்டிற்கு அக்குடும்பம் கடப்பாடுடையதாக இருக்க வேண்டும். நன்றியுள்ள குடிமக்களாக அக்குடும்பத்தினர்கள் விளங்க வேண்டும். மேலும், நல்லதோர் லட்சியக்குடும்பம் பிறரது வாழ்வில் அக்கறை கொண்டு பிறர்நலனையும் போற்றி பிறரைப் பாராட்டும் நற்குணம் கொண்ட குடும்பமாக இருக்க வேண்டும்.